சிந்தனைக்கு

உங்களின் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள் ஒரு வேளை அடுத்த முறை நீங்கள் தோற்று விட்டால் உங்களுடைய முதல் வெற்றி அதிஸ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன - அப்துல் கலாம்

Monday, August 29, 2016

பாலபாரதி கவிதைகள்

பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்
இறங்கிச் செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்
கைக்குழந்தையின் 
கால் கொழுசை தடவிய படி 

குடிப்பதற்கு தண்ணீர் தேடி
இரவெல்லாம் கண் விழித்து
வீதி வீதியாய் குடங்களோடு அலைந்தோம்
எங்கள் துயரம் தீர்க்க
எம் எல் ஏ தேடினோம் தொலைபேசியில்
எப்பொழுது கேட்டாலும் கிடைத்த பதில்
தூங்குகிறார்
குளித்து கொண்டிருக்கிறார்

கல்யாண்ஜி கவிதைகள்

முன்னிருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து உதிர்ந்து கொண்டிருந்தது பூ
தாங்க முடியவில்லை


ல்லாம் அடையும் தூரத்தில்
இடையில் தடையாய்
சில எச்சில் பருக்கைகள் 



ருந்து என்ன ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம் 


இடப்பெயர்ச்சி 
ருப்பு வளையல் கையுடன்
குனித்து வளைந்து
பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு 


  கோடை 
நாணல் முளைத்து
தண்ணீர் கரை நனைத்து
நதியெல்லாம் மணல் பாய
குளித்து கரையேறும்
கல் மலர்கள்


ன்னையா நீ காதலிக்கிறாய் ?”
ஆமாம் அப்படித்தான்
என் காதல் கரை பட்டது
இருக்கட்டுமே
உன்னை பட சொன்னால்.....
"பாடுவேன்"
உன்னை  துய்க்க நினைத்தால்
"ஒரு சைகை போதுமே"
நம்மிடையே ஒரு சுவர் எழுகிறது
"உடைப்பேன்"
ஒரு முடிச்சு
அறுத்தெறிவேன்
உன்னை நான் கொன்று விட்டால் ?
மரணம் இனிப்பானது
இன்னும் என்னைக் காதலிக்கிறாயா?
சின்னன் சிறார்கள் சிரிக்கிறார்கள்
நான் அஞ்சுகிறேன்
ஆப்பிள் மரங்கள்
வெள்ளை பூக்களை வெளியிடுகின்றன
நான் அஞ்சுகிறேன்
இரண்டையும்
அணு ஆயுதங்களின் கண்கள்
கவனித்துக்கொண்டே இருக்கின்றன
-ரசூல் சோவியத் யூனியன் 

ஏசுநாதர் ஏன் வரவில்லை?

லை காது மூக்கு கை மார்பு விரல்
தாள் என்ற எட்டுறுப்பும்
தங்க நகை வெள்ளை நகை ரத்தினமிளைத்த நகை
தையலர்கள் அணியாமலும்
விலை குறைந்த ஆடைகள் அணிந்துமே கோயில் வர
வேண்டுமென்றே பாதிரி
விடுத்த ஒரு சேதியால் விசமென்று கோயிலை
வெறுத்தார்கள் பெண்கள் புருஷர்
நிலை கண்ட பாதிரி பின் எட்டு உறுப்பே அன்றி
நீள் இமைகள் உதடு நாக்கு
நிறைய நகை போடலாம் கோயிலில் முகம் பார்க்க
நிலைக்கண்ணாடியும் உண்டென

Thursday, January 21, 2016

இறந்து போனவனின் கடைசி கடிதம்


வாழ்ந்து  கொண்டிருப்பவர்களுக்கு வணக்கம் .

இந்த கடிதத்தை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் போது நான் உங்களுடன் இருக்கபோவதில்லை

என் மூச்சுக்காற்றை நுரையீரலை விட்டு வெளியேற விடாமல் கழுத்தோடு ஒரு முடுச்சை போட்டு தடுத்து நிறுத்த போகிறேன்.
என் மரணத்திற்கு நியாயம் கேட்டு கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தலாம்.

இந்த கடிதத்தின் எந்த ஓர் இடத்திலும் நான் என் ஜாதியை குறிப்பிட போவதில்லை. ஆனாலும் நான் அம்பேத்காரை பின்பற்றுகிறவன் என்ற காரணத்தினாலே நீங்கள் எல்லோரும் என்னை தலித் என்று அடையாளம் கண்டு அழைப்பீர்கள்.

ரோஹித், ஆராய்ச்சி மாணவர், முனைவர் பட்ட மாணவர் என்றெல்லாம் அழைத்தாலும் அவற்றுக்கு பின்னால் தலித் என்ற சொல்லை சேர்த்துக்கொள்வீர்கள்.

தலித் மாணவர் தற்கொலை,தலித் மாணவருக்கு நீதி வழங்கிடு தலித் மாணவரின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய் என்று எழுதிய பலகைகளை கையிலேந்தி போராடுவீர்கள்

தலித் மாணவனை கொன்றது எது? என்று விவாதம் நடத்துவீர்கள். அந்த விவாதத்தில் தண்ணீர் குடிக்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் என்னை தலித் மாணவன் தலித் மாணவன் என்றே சொல்லி தீர்ப்பீர்கள்

என்னை ஒரு ஆராய்ச்சி மாணவனாகவோ எழுத்தாளனாகவோ மட்டுமே அறிந்திருந்தவர்களுக்கு இவன் ஒரு தலித் என்பதை சுட்டிகாட்டுவீர்கள்

இதே நிலை ஒரு ஆதிக்க சாதி மாணவனுக்கு ஏற்பட்டிருந்தால் அவனை ஒரு ஆராய்ச்சி மாணவனாக மட்டுமே அடையாளபடுத்தி இருப்பீர்கள்

இந்திய குடியரசிற்கு பாடுபட்டவர்களையெல்லாம் தேச தலைவர்கள் என்பீர்கள். அதை அமைத்துகொடுத்த அம்பேத்காரை மட்டும் தாழ்த்தபட்டவர்களின் குறியீடு என்பீர்கள். அவரை பின்பற்றுபவர்களை தலித் என்று சொல்வதில் பெருமிதம் கொள்வீர்கள்

பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைகழகத்தில் நான் சொல்ல கூசிய அந்த வார்த்தையை, எப்போதெல்லாம் நான் தலையை  உயர்த்தினேனோ அப்போதெல்லாம் எழுந்திருக்கவே முடியாதபடி என்னை அழுந்தி தள்ளிய அந்த வார்த்தையை, மற்றவர்களின் மூலைகளிலெல்லாம் அறிவுச்சுடர் ஒளிவிடுகிறது என்றும் எங்களின் மூலைகளில் மட்டும் இட ஒதுக்கீடு மட்டுமே உள்ளது என்று நம்பச்செய்த தலித் என்ற அந்த வார்த்தையை அனாயாசமாகப் பயன்படுத்துவீர்கள்.

அதிகார மையம் எந்த வார்த்தையை வைத்து அவ்வளவு எளிதாக என்னை மரணத்தை நோக்கி தள்ளியதோ அதே வார்த்தையை வைத்தே என் மரணத்திற்கு நீங்கள் நியாயம் கேட்பீர்கள்

அவர்கள் என்னை தலித் என்பதற்காக ஒரு முறை கொன்றார்கள்.
நீங்கள் அதே வார்த்தையை சொல்லி உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னை கழுவேற்றுவீர்கள்
-\¼ªVë       21.01.16…..   5:20 am

Wednesday, December 16, 2015

தீர்ப்பு


ன் கண்முன்னே ஒரு
ஒரு கொலை செய்யுங்கள்

நீங்கள் கருணையற்றுப் புணர்ந்த
ஒருவல்லுறவுக்கு நான்தான் சாட்சி

நீங்கள் அடித்த கொள்ளைக்கும்
கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதென்று
நீங்கள் செய்த காரியங்களுக்கும் 
நான்தான் ஆதாரம்

இன்னும் இன்னும்
நீங்கள் செய்த
சட்டத்திற்கு புறம்பான
சட்டத்திற்கு ஆகாத
செயல்கள் அனைத்திற்கும்
நான்தான் ஒரே சாட்சி

பயப்படாதீர்கள்
எப்பொழுதும் போலிருங்கள்
ஒன்றும் பிரச்னை இல்லை
ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்
நான் எங்கேயும் போக போவதில்லை

இன்று
மனு நீதிச் சோழனின்
தேர்ச்சக்கரங்கள்
கன்றையும் கொன்றுவிட்டு
ஆராய்ச்சி மணியை அடித்துக் கொண்டிருந்த
பசுவையும், அசுர பசியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது 
எனக்குத் தெரியும்
                    

Tuesday, December 15, 2015



சிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலையை எதிர்நோக்கி காத்துகொண்டிருந்த காலம். கவிதை, ஓவியம், நூலகம், தூக்கம் என்று பொழுதை கழித்துகொண்டிருந்தேன். அப்பொழுது வரைந்த ஓவியங்கள் இவை. 
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் வரைய ஓர் நாள் பிடித்தது (கற்பனை ஓவியம் அல்ல. பார்த்து வரைந்தது தான்.இசைக்கருவிகள்  ஓவியம் மட்டும் கற்பனை). கருப்பு மை gel பேனா மட்டுமே பயன்படுத்தி வரையப்பட்டவை. 
இப்பொழுதெல்லாம் நேரம் இல்லை என்று சொல்லி என்னை நானே ஏமாற்றிகொண்டிருக்கிறேன். 

Wednesday, November 25, 2015

போதை தெளிவது எப்போது?


திருச்செங்கோட்டில்  மது அருந்தி விட்டு தேர்வறையில் மயங்கி விழுந்த 7  மாணவிகள் பள்ளியை விட்டு நீக்கம் - செய்தி 
         இந்த செய்தி நமக்கு எந்த அதிர்ச்சியையோ கோபத்தையோ ஏற்படுத்தவில்லை. இல்லை இது அதிர்ச்சியான சம்பவம் தான் கோபபட வேண்டிய விஷயம் தான் என்று நீங்கள் கருதினால் நீங்கள் தற்கால உலகத்தில் இல்லை என்று அர்த்தம். நீங்கள் அந்த காலத்து ஆள்  (நீங்க இன்னும் வளரனும் தம்பி)
     செய்திகளில் நீங்கள் படித்திருக்கலாம். “வெளிநாட்டில் பள்ளியில் மாணவன் துப்பாக்கியால் சக மாணவனை சுட்டான்” அவர்களுக்கு துப்பாக்கி சகஜமாக கிடைக்கிறது. நமக்கு மது சாதாரணமாக கிடைக்கிறது.
    இது போன்ற சம்பவங்கள் நமக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றாலும் இவை நாம் எதிர்பார்த்ததுதான்.
          எங்களின் பள்ளி பிராயத்தில்.........